Tuesday, September 8, 2020

 

ஶ்ரீ குலசேகராழ்வார்

(ம. இராஜகோபாலன், தமிழபிமானி.)

 

இவர் அரசராயிருந்து, தெய்வபக்தியில் மேம்பட்டு, அரச போகத்தை வெறுத்து, பகவானை யடைந்தவராதலின், இவருடைய சரித்திரத்தை நாம் வாயாரப் படிப்பதும், மனதாரச் சிந்திப்பதும், செவியாரக் கேட்பதும் நமக்கு நன்மையேயாம் என்பதிற் சந்தேகமில்லை.

 

கொல்லி என்னும் பெயரைக் கொண்ட ஊர் ஒன்றுண்டு. அது நமது புண்ணிய பூமியாகிய பரதகண்டத்தில், எல்லா வளங்களிலும் சிறந்திருந்த தென்று சங்க நூல் முதலான நூல்களில் புகழப் பெற்றிருக்கின்றது.

 

இதை முன்னொரு காலத்தில் திடவிரத பூராஜதேவன் என்னும் வேந்தர் பிரானொருவன் அரசு புரிந்து வந்தான இம்மன்னன் சகதியவந்தன்; குடிகளைத் தன்னுயிர் போற்கருதி பரிபாலித்து வரும் சீல குணமுடையவன்; தெய்வபக்தியிற் சிறப்பும் நவ; கல்வி கேள்விகளில் நிபுணத்துவம் படைத்தவன். இப்படி நற்குணங்களிலும், நற்செயல்களிலும் ஒப்புயாவற்று விளங்கி வந்த இம்மன்னா மன்னனைத் தங்களுயிர் போலெண்ணக் குடிமக்கள் இவனிட்ட விதிவிலக்குகளுக்கு அன்புடன் உட்பட்டு நடந்து வந்தார்கள்.

 

இவ்வரசனுக்கு எல்லா பாக்கியங்களும் கைகூடி யிருந்தும் புத்திரபாக்கியம் ஒன்று மட்டும் கைகூடாதிருந்தது. இது அவனுக்குப் பெருத்தமனவேதனையாக விருந்தது. அவன் இது விஷயமாகத் தன் சமஸ்தானபண்டிதர்களிடம் முறையிட்டுக் கொண்டான். அவர்கள் புத்திர காமேஷ்டியாகத்தைச் செய்யும்படி அவனை எச்சரித்தார்கள். அவ்வாறே அப்பூபதிசந்தோஷ சித்தத்துடன் சற்குண சம்பனனராய் விளக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிட்டுக் கொண்டு, பகவானுடைய சந்நிதானத்தில் அந்த யாகத்தைக் குறைவின்றிச் செய்து முடித்தான். பகவானுடைய திருவருளால் இவ்வரசனுடைய தரும் பத்தினியாகிய நாத நாயகியம்மாள் கருப்பவதியாய் பத்துமாதமும பூர்த்தியானதும், சோகுலத்துக்கோர் தீபம் போன்று, எம்பெருமானது ஸ்ரீ கொளஸ்துப மாணிக்கத்தின் அசெமாய், கலியாப்தம் இருபத்தெட்டின், பராபவ, மாசி மீ, சுக்கில பக்ஷம், புனர்பூசம், துவாதசி கூடிய குருவார சுபதினத்தில் இராஜ லக்ஷணங்கள் பொருந்திய ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

 

திவ்வியமான தேஜசுடன் தனக்கோர் குழந்தை பிறந்தமைக்காக அரசன் பெரிதும் மகிழ்வடைந்து, நகரமுற்றும் அலங்கரித்து கோதானம், பூதானம், அன்னதானம், சொர்ணகானம் முதலிய தானங்களை வழங்கி, தெய்வஸ்தானங்களில் பற்பல திருவிழாக்களைக் கொண்டாடினான்; குழந்தைக்கு ஜாதகங்கணித்து, பன்னிரண்டாவது நாளில் சுற்றத்தார் தொடக்கமான மற்றவருஞ் சூழக் குழந்தையை "மாணிக்கங்கட்டி வைரமிடை கட்டி ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச்சிறு தொட்டிலில் கிடத்தி, மட்டற்ற   வைபவத்துடன் மங்களம் பாடி தக்கவர்களைக் கொண்டு குலசேகரன் என்று அதற்குத் திருநாமஞ் சாற்றி, நாளடைவில் சௌளம் அன்னப் பிராசனம் (சோறூட்டல்) முதலிய திரியைகளை நடத்தி, உபநயனஞ் செய்து குருமுக மாக வித்யாரம்பமும் செய்வித்தான்.

 

குலசேகரர், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகலின், சில தினங்களுக்குள்ளாகவே வேத வேதாந்தாதிகளை யெல்லாம், சமுத்திர ஜலத்தை ஆவிரூபமாகக் கிரகிக்கின்ற சூரியனைப்போல, ஞான ரூபத்தாற் கிரகித்துப் பக்திநெறியைக் கடைப்பிடித்த மேதாவியானார். இதனை வேந்தன் கண்டு அகமகிழ்ந்து, யுக்த வயதில் இவருக்குத் திருக்கலியாணமும், இராஜ்யாபிஷேகமும் செய்வித்தான். பின்னர் இவர் பிரஜாபரிபாலனஞ் செய்யு முறையையுஞ் சிலநாள் இவருடனிருந்து பார்த்து மனம் பூரித்து, அரசன் பத்தினி சகிதமாய், சத்கதியடையத் தவக்கோலம் பூண்டு நாட்டை விட்டுக் காட்டையடைந்தான்.

 

தந்தையுந் தாயும் கானகஞ் சென்றதும், கல்விக்கு இருப்பிடமும், செல்வத்திற்கு உதிப்பிடமும், சற்குணத்திற்குச் சுரப்பிடமும் ஆன இவர், தமது தந்தையினும் குடிகளிடத்தில் போன்புடையவராய், நீதி வழுவாது நின்று செங்கோ லோச்சி வந்தார். ஒருநாள் உபய விபூதி நாயகனான திருவேங்கடத்தெம்பெருமான், இவருடைய ஸ்வப்பனத்தில் எழுந்தருளித் தனது நிர்ஹேதுக பாமகிருபையாலே சேவைசாதித்து, இவரைப் பரம சாத்வீகராம்படிக்கடாக்ஷித்து, தனது சொரூப ரூபகுண விபூதிகளை யெல்லாம் காட்டியருளி மறைந்தனன். உடனே இவர் திடுக்கிட்டு நித்திரை குலைந் தெழுந்து, படுக்கையில் வீற்றிருந்தபடியே அநுபவரீதியிலுண்டாகிய அதிசயத்தால் அடங்காத அன்புகொண்டு, பகவானுடைய சௌலப்பியத்தையும், சேதனன் அவனை அடையப்பெறாத இருதயக் கடினத்தையும், தமக்குத் தற்காலம் கிடைத்த அவனுடைய சேவையிலுண்டான ஆனந்தத்தையும், இதற்கு முன் இராஜ்யாதி பாரத்தால நுபவிக்க நேர்ந்த துக்கத்தையும் ஒன்றோடொன்றொப்பிட்டுப் பார்த்து, தம்மால் பகவானுக்குச் செய்யப்பட்ட தொன்றும் இல்லையாக விருந்தும், அவனே இப்படி நிர்ஹேதுக்கமாக அருள் செய்திருப்பதற்குக் கைம்மாறு யாது செய்யக் கடவோ மென்றெண்ணித் தளர்வடைந்து எழுந்து உலாவும் போது ஒன்றுந் தோன்றாதவராய், சிலாவிக்கிரகம் போல் அசையாதிருந்து விட்டார்.

 

அதிகாலையில், இவரைப் படுக்கையினின்றும் எழுப்புகிறவர்கள் வந்து வீணை முதலிய இசைக் கருவிகளை நெடு நேரம் மிழற்றியும், இவர் அசையாதிருப்பது கண்டு, பயந்து, அமைச்சர்களிடம் ஓடி இதனையறிவிக்க, அவர்களும் வந்து சில சைகைகள் செய்து பார்த்து இவரிடமிருந்து பதிலொன்றும் பெறாதவராய், இவருக்கு அந்தரங்கத் தொண்டர்களைப் படுக்கையறைக்குள்ளே யனுப்பிப்பார்த்து வரச்சொல்ல, அவர்கள் சென்று இவர் அசையாது நிற்கும் திருக்கோலத்தைக் கண்ணுற்றுச் சேவித்து வெளியே வந்து
'அரசர் ஏதோ யோசனையில் மூழ்கி யிருக்கிறார்' என்றுரைத்தனர்.

 

அமைச்சர் முதலியோர் இவர் விஷயமாகத் தத்தமக்குத் தோன்றியவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் சந்தடியால் குலசேகரர் தெளிந் தெழுந்து வெளியே வந்து ஒருவரோடும் பேசாமல், பகவத் பக்தியிற் சிறந்துள்ள முதல் மந்திரியை அழைத்து 'அன்ப அநித்தியத்தை நித்தியமென்றெண்ணி வாழ்நாளை வீழ்நாளாகக் கழித்து வந்த என்னையும் ஒரு பொருளாகமதித்து, பகவான் சேவை தந்தருளினன்; மெய்யறிவை யூட்டினன்; ஆதலால் இனி' கம்பமதயானைக் கழுத்தகத்தின் மேலிருந்து, இன்பமருஞ் செல்வ
மும் இவ்வரசும் யான் வேண்டேன்'; பாகவ தோத்தமர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தேடிக்கொடு வந்து, அவர்களிடம் சாத்காலக்ஷேபம் கேட்க வேண்டும்'' என்றுரைத்து அவ்வாறே செய்தும், மழிசைப் பிரானும், குருகைப்பிரானும் அருளிய பிரபந்தங்களைச் சேவித்தும், ஒட்டிலொட்டாத புளியம் பழம்போலும், சேற்றிலொட்டாத பிள்ளைப் பூச்சி போலும், தாமரையிலையிலொட்டாத நீர்த்திவலைபோலும், இராஜ்ய காரியங்களில் பற்றியும் பற்றாதவராயிருந்து வந்தார். பிறகு திருமலைக்குச் சென்று ஆங்குள்ள திருவேங்கடத்தெந்தையை அடிதொழுது, ''ஊனேறு செல்வத்துடற் பிறவியான் வேண்டேன்............ கோனேரி வாழுங் குருகாய்ப் பிறப்பேனே ", " திரு வேங்கடச்சுனையில்... மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே ", "... எம் பெருமான்
 பொன்மலைமேல் ஏதேனு மாவேனே ", "'.... படியாய்க் கிடந்துன் பவள வாய் காண்பேனே'' என்று விண்ணப்பித்து அப்பெருமானுடைய அனுக்கிரகம் பெற்று அங்கிருந்து வட நாட்டுத் திவ்யதேசங்களுக்குப் போய் அங்கங்குள்ள பகவத் மூர்த்தங்களைச் சேவித்து, நேரே தமது இராஜ்யத்தை யடைந்தார்.

 

இராஜ்ய காரியங்களில் நிராசை கொண்டு, பகவத் காலக்ஷேபத்திலீடுபட்டு ஸ்ரீரங்கமகாத்மியத்தைக் கேட்டருளி அத்யந்தப் பிரீதி பரவசராய், ''அணியாங்கன் திரு முற்றத்தடியார்' களான ஸ்ரீவைஷ்ணவசாது கோஷ்டியின் இன்பமிகு பெருங்குழுவு கண்டியானும் இசைந்துடனே யென்றுகொலோ இருக்கும் நாளே " என்று பாசுரமிட்டுக் கொண்டிருக்கையில் ஸ்ரீ ரங்கநாதன் இவர் கருத்தை முற்றுவிக்க அனந்தகருட விஷ்வக் சேனாதிநித்திய சூரிகளைக் கடாக்ஷித்து " நீங்கள் மனித வுருவுடன் சென்று ஆழ்வாருக்குச் சேவைதந்து வாருங்களென்றனன்; அவர்களும் அந்தணராய் ஸ்ரீவைஷ்ணவ ரூபங்கொண்வரிருக்கும் இடத்தே வந்து சேவை தந்தனர்; ஆழ்வாரும் அவர்களைக் கண்டதும் எதிர் சென்று பசரித்து அழைத்து வந்து, அவர்களுடைய திருவடிகளில் தமது முடிசோ வீழ்ந்து, தண்டன் சமர்ப்பித்து அவர்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று அவர்களைக் கூடத்திற் கெழுந்தருளப்பண்ணி, ஆசனத்திருத்தி ஸ்வரூபானு ரூபமாக ஆராதித்து, சத்கால க்ஷேபங்களைக் கேட்டு ஆனந்தங் கொண்டார். அப்போது "ஸ்ரீரங்கயாத்திரை செய்வதும், அதில் இச்சை கொள்வதுமே தீரா நரகைத் தீர்த்து வைகுந்த வாழ்வைத் தரு மென்னில் அந்த ஸ்தலத்தில் வாசஞ் செய்வோர்களுடைய பிராப்தியை என்னென்று விவரிக்கலாகும்" எனவரும் வாசகத்தைக்கேட்டு உடனே ஆழ்வார் ஸ்ரீரங்கயாத்திரையில் மனதைச் செலுத்தி கோஷ்டிகளுக்குத் தெண்டனிட்டு "அடியேன் ஸ்ரீரங்கத்திற்கு இப்போதே செல்ல வேண்டும்; விடை கொடுத்தருள்வீர்'' என்று பிரார்த்தித்தார். அதற்கு அவர்கள் ''அறுபதினாயிர வருஷம் பெருமாளை யாராதித்து வந்த வொருவனடைகிற பலனைப் பார்க்கிலும் அவனடியார்களி லொருவரை யொரு வேளையிலாராதித் தவனடையும் பலன் பெருத்த " தென்றனர். அங்ஙனமேயாகுக! பிரயாணத்தை மறுநாள் வைத்துக் கொள்வோம் என்றனர் ஆழ்வார். மறுநாளும் இவர் பயணம் தடைபடும்படி பகவத்சங்கல்பத்தால் இவர் எதிர்பாராத அடியவர் பெருங் கூட்டமொன்று இவரிடம் வர, அவர்களை யுபசரிப்பதில் இவர் கவனஞ் செலுத்தலானார். இவ்வாறே இவருடைய பயணம் பல நாள் நிறைவேறாம லிருந்தது. ஆயினும் அரசன் ஸ்ரீரங்கயாத்திரை செய்யப் போகிறா ரென்கிற கோஷம் மாத்திரம் ஊரெங்கும் பரவியிருந்தது.
 

இப்படி யிவர் யாத்திராபேட்சையுடன் பாகவத ததியாராதனையிலீடுபட்டுக் கொண்டும், இதிகாசசிரேஷ்டமான ஸ்ரீ ராமாயண காலக்ஷேபத்தை நடத்திக் கொண்டும் வாலானார். ஒருநாள், காலக்ஷேபத்தில், " பெருமாள், வைகுந்த வாசித்தியை என் ரங்கயாந்தில் ஸ்ரீரங்கத்த இளைய பெருமாளைப் பிராட்டிக்குக் காவலாக வைத்து விட்டுத் தாமொருவராகவே கரதூஷண திரிசிராதி பதினாலாயிரந் துஷ்டராக்ஷஸாக ளெதிரில்யுத்தத்திற்குப் புறப்பட்டாரே; தனியே சென்ற பெருமாளுக்கு அத்தீயோரால் என்ன கெடுதி சேரிடுமோ என்று ஸ்ரீ வால்மீகி பகவான் கலங்குகிறார் என்னும் விஷயத்தைப் புராணிகர் உபந்யாசிக்கக் கேட்டதும் வேறெதிலும் சிந்தை செலுத்தாமல் காலக்ஷேபத்தையே சிரத்தையாய்க் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ குலசேகரர் " அப்படியா? பெருமாளுக்குத் துணையாவார் ஒருவருமிலரா? நல்லது நாமே துணையாவோம்'' என்று சொல்லி உடனே யுத்த கோலத்துடன் புறப்பட்டுச் செல்லுவாராயினர். இதைக் கண்ட அமைச்சர் முதலானார் நமது அரசருக்கு சித்தப் பிரமை ஏற்பட்டு விட்டது போலும்! எப்போதோ நடந்த யுத்தத்திற்கு இவர் இப்போது துணை செய்யப் போகின்றாராம்! இதென்ன பைத்தியம்?'' என்று பேசிக்கொண்டு,'' நாமிதைத் தடுக்கும் உபாயம் யாது? " என்று சிந்தித்து, சிலரை யேவி, இவரெதிரில் வரவிட்டு'' பெருமான் ஒருவராகவே நின்று அந்த ராக்ஷஸப் படையை நிர்மூலமாக்கித் திரும்பிவிட்டார்'' என்று இவருக்குத் தெரிவிக்கச் செய்தனர். அவர்களும் அவ்வண்ணமே செய்ய, ஆழ்வார் சந்துஷ்டராய் ராஜஸ் தானத்துக் கெழுந்தருளினார்.

 

மற்றொரு நாள், இவருக்குக் காலக்ஷேபம் சாதித்து வரும் புராணிகர் ஏதோ அசந்தர்ப்பத்தினால் தமது புத்திரரை காலக்ஷேபஞ் சாதிக்க இவரிடம் அனுப்பினர் அப்புத்திரர் இவருடைய திருவுள்ள நெகிழ்ச்சி யிருக்கும் படியை யறியாதவராய், கொஞ்சம் படபடப்புடன் "ஆ! ஆ!! அந்தக் கொடிய இராவணன், மாரீசனால் பெருமாளையும் இளைய பெருமாளையும் அப்புறப்படுத்தி, பிராட்டியை அபகரித்துக் கொண்டு போயினானே! இதென்ன அநியாயம் " என்று வால்மீகி பகவான் மனவேதனை யடைந்தார்" என்று உபந்யசித்தார். இவ்வசனங்களைச் செவியேற்ற ஆழ்வார் " அந்த வஞ்சகனான இராவணன் பிராட்டியைக் கவர்ந்து சென்றானா? நான் இந்தக்ஷணமே இலங்கைக் கேகி, இராவணனுடைய தலைகளைத் துணித்துப் பிராட்டியை மீட்டுக் கொண்டு வந்து, முன்னிருந்த இடத்தில் சேர்ப்பிக்கிறேன் " என்றுசொல்லி அந்த நிமிஷமே தமது ஆசனத்தினின்றும் எழுந்து, உருவிய வாளுங்கையுமாய் ஓர் புரவியின் மீது ஆரோகணித்துக் கொண்டு, சேனைகளைவிரைவாகத் தம்மைப் பின்தொடர ஆக்யாபித்து, இலங்காபுரியை நோக்கி அதிவேகமாய்ச் சென்று சமுத்திரத்திலுந் துணிந்து இறங்கி விட்டார்.

 

இவரது அபரிமிதமான பக்தியின் மேன்மையைக் கண்டு பகவான் இவருக்கும் இவர் சேனைகளுக்கும் சமுத்திர ஜலத்தை முழந்தாள்ளவு படுத்திதான் சீதா லக்ஷ்மண சமேதராய், ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் மகாராஜா தொடக்கமான சைனியங்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறியருளி யெதிரே வந்துசேவை சாதித்து "ஆழ்வீர்! நாமந்த இராவணனை அவன் குலத்தோடு மழித்து வெற்றி கொண்டு வந்திருக்கிறோம். நீர் கொண்ட கவலையை ஒழித்துவிடும்'' என்றனன். ஆழ்வாரும் அவர்களனைவரையும் தமது திருமாளிகைக்கு அழைத்துக் கொண்டுபோய் மூன்று நாள் பரியந்தம் வைத்திருந்து ஆராதித்து வந்தனர். பெருமாள்'' ஆழ்வாரே! நாம் இன்னமும் இங்கு தாமதித்துக் கொண்டிருந்தால், பரதாழ்வான் கதியாதாமோ? விடைதர வேண்டும்'' என்று விடைபெற்றுக் கொண்டு, அயோத்தியை நோக்கிச் செல்பவர் போலபிநயித்து அந்தர்த்தான மாயினர்.

 

இப்பிரிவாற்றாமை ஸ்ரீ குலசேகரரை மூர்ச்சையு எழுத்திவிட்டது. முதன் மந்திரி தக்க உபசாரத்தால் அம்மூர்ச்சிப்பி னின்றும் இவரைத் தெளிவிக்க, இவருந் தெளிந் தெழுந்து வேதோபப்ராம்ஹண சாரமாய் மணி மந்திர அவிழ்தங்களை விவரிக்கும் ஸ்ரீ முகுந்தமாலை என்னும் ஸ்ரீ சூக்தியைப்பாடியருளி அன்று தொட்டு பிரபஞ்ச வாழ்வை வெறுத்து, பகவத் விஷயத்தில் ஈடுபட்டு, சந்ரவர்த்தி திருமகனாரையே திருவாராதனமாக எழுந்தருஎப் பண்ணிக் கொண்டு ஸ்ரீமத்ராமாயண காலக்ஷேபத்தைப் பூர்த்தி செய்து, ஸ்ரீராம நவமியில் பெருமாளை யுத்ஸவங் கண்டருளப் பண்ணினார்.

 

அமைச்சர்கள் "எது ஸ்ரீ வைஷ்ண சகவாசத்தால் நமது அரசருக்கு இந்தப் பைத்தியம் பெரிதாய்விட்டது. இந்த மாற்றவேண்டும்'' என்றானோசித்துப் பெருமாளுடைய பெட்டிய லிருந்த தோர் நவரத்ன சோபிதமானஹாரத்தை யெடுத்து மறைத்து வைத்து, இவருக் கந்தரங்கவுத் தேசியரான ஸ்ரீ வைஷ்ணவர்களே அவ்வாபரணத்தை பதரித்தனர் என்று இவருக்கறிவித்தனர். இவரதை யங்க்கரியாது, உழையர் மூலமாக விஷமுடைய சில சர்ப்பங்களைப் பிடித்து, ஒரு பெருங்குடத்திலடைத்துக் கொண்டு வரச்செய்து, ஸ்ரீ வைஷ்ணவ நிந்தை கூறுவோரைக் கூப்பிட்டு நீங்கள் பேசுவது உண்மையானால் இக்குடத்திற்சையிட்டுப் பிரமாண பூர்வமாகச் சொல்லுங்கள். அப்போதுங்கள் பேச்சை நம்புவேன்' என்றார். ஒருவரும் அதற்கு உடன்படவில்லை. பிறகு ஆழ்வார் தாமே அக்குடத்தில் தமது கையை விட்டு அதன்கணுள்ள சர்ப்பங்களின் தலை மீதறைந்து, " களவு போன ஹாரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்க ளெடுக்கவில்லை'' என்று சபதஞ் செய்தார். அச்சமயம் அந்த சர்ப்பங்களி லொன்று ஆழ்வாருடைய புஜவழியாக மேலேறிப்படம் விரித்து, அபாது திருமுடிமேற் குடையாகக் கவிந்து நின்றது. மற்றொன்று பழி கூறினவர்களைச் சீறித் துறத்திற்று. அவர்கள் பாந்து ஆபரணத்தைக் கொண்டு வந்து ஆழ்வார் முன் சமர்ப்பித்தனர்.

 

பின்னொருநாள் ஆழ்வார் பவத் ஸ்வரூப ரூபகுணாதிசயங்களில் ஈடுபட்டுத் தம்மை மறந்திருக்க, ஓடி வந்து அவரை நோக்கித் 'தேவரீருடைய திருக்குமாரன் குளிக்கப்போய், குளத்தில் மூழ்கிவிட்டனனே" என்று கூக்குரலிட, இவர் புத்திரன் என்னைக்கைவிட்டாலென்ன? ஒன்றும் கஷ்டமாகவில்லை, பகவான் கைவிடலன்றோ நமக்சென்று கொழியாத தொல்லை "எனக்கூறிப் பிறகு கண்விழித்துப் பார்க்க, தமது அரும்பெறற் தமரன்தம் எதிரே உலாவக்கண்டு, உலாபோகந்தை வெறுத்து, இந்த இருள்தருமா தாகத்தில் தன்மை கொடிது! கொடிது!! மகாதொடிது!!! "பொய்ந்தின்ற ஞானமும் பொல்லா வொழுக்கால் அழுக்குடம்பும், இந்கின்ற நீரமை யினியா மராதை யே கல்ல தென்று தம்முன் நிச்சயித்து, உடனே தமது புத்திரனுக்கு முடிசூட்டிவிட்டு, திருவரங்கம், திருக்கண்ணபுரம், தில்லைத் திருச்சித்ரகூடம் இந்த திவ்ய க்ஷேத்திரங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள எம்பெருமான்களைச் சேவித்து திருவருள் பெற்ற முடிவில் வீரநாராயணபுரம் அடைந்து மன்னாரைத் திருவடி தொழுது, தமது அறுபத்தேழாவது திருநட்சத்திரத்தில் திருநாட்டுக் செழுந்தருளி " அந்தமில்பேரின் பத்தடியாரோடு " வாழ்ந்திருந்து நிலவுக்கத்தை யுய்வித் தருளினார் இவ்வாழ்வாருடைய திருநாமத்தை நாம் உச்சரித்திருப்பதினாலேயே நன்மை யடையலாம் என்பதைப் பின்வரும் பாடலால் நன்குணரலாம்.

"இன்னமுதம் ஊட்டு கேன் இங்கேவா பைங்கிளியே
 தென்னாங்கம் பாடவல்ல தீர்ப்பெருமான் - பொன்னஞ்
 சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்
 குலசே கரனென்றே கூறு''

சுபம்! சுபம்!!

ஆனந்த போதினி – 1928 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment