ஹிந்து ஸ்திரீகளின் நிர்ப்பாக்கியம்
(ஸ்ரீமதி ஜி. சுமதி பாய், B. A., LT., எழுதியது.)
பாரத மாதாவின் ஸ்துதி
எங்கும் சப்திக்கும் நம் இந்திய தேசத்தில் அம்மாதின் மகளிர்களான பெண்கள் மாத்திரம்
கைதிகளெனக் கட்டுண் இழலுவது வியப்பன்றோ! ஹிந்து மாதா அன்னியரின் கையினின்று விடுதலைப்பட
வேண்டின், ஸ்திரீகள் பழையரீதியின் அநியாயத்தின்றும், பழக்க வழக்கங்களின் கட்டுக்காவலினின்றும்
தப்ப வேண்டாமா? 'நம் தேசத்துப் பெயர்களுக்குக் குறையொன்றும் இல்லை' என அனேகர் பெருமை
பாராட்டுவது முண்டு. அத்தகையரின் அபிப்பிராயப்படி, ஸ்திரீகளுக்கு ஆகாரம் ஆடை ஆபரணம்
தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை போலும்! நம் இந்திய மகளிரின் நிஜமான நிலைமையை இங்குச்
சற்றுக் கவனிப்போம்.
குழந்தைப் பருவம்
தொட்டே பெண்கள் உபேக்ஷிக்கப்படுகின்றனர். அனேக குடும்பங்களில் ஆண் குழந்தை பிறந்ததென்றால்
வெகு ஆடம்பரம் செய்வதுண்டு; பெண் பிறந்தாலோ அதை அலக்ஷியம் செய்வது மன்றி, ''ஐயோ, நம்
அதிர்ஷ்டம் பெண்ணாச்சே' என மனம் வருந்துவது முண்டு. மற்றும் ஆணுக்கு ஐந்து வயதானால்
அக்ஷராப்பியாசம் செய்வதுண்டு. பெண்ணுக்கோ கல்வி அவசியமில்லை! ''அடுப்பூதும் பெண்ணுக்குப்
படிப்பென்னத்திற்கு?'' என்பர் பலர். சிலர் தம் பெண்களை பள்ளிக்கு அனுப்பினும் அவர்களின்
வித்தியாப்பியாசம் அற்பகாலமே நீடிப்பது. பத்துபன்னிரண்டு வயது ஆகுமுன் அப்பெண்களின்
கல்விப் பயிற்சி நிறுத்தப்படுகின்றது. இரண்டு மூன்று வருஷங்களில் அவர்கள் என்னதான்
கற்கக்கூடும்? கல்வியின் களஞ்சியத்தினின்றும் பரிகரிக்கப்பட்ட பெண்களுக்கு வேறென்ன
சம்பத்து இருப்பினும் யாது பயன்? கல்வி அறிவு இல்லாத ஆண்மகன் ஒருவனை அனைவரும் மூட னென
ஏளனம் செய்வரன்றோ? பெண்கள் மாத்திரம் வித்தையின்றி அஞ்ஞானத்தி லிருப்பது தகுமோ? அன்றி
பெண்கள் அனைவரும் சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவரோ?
ஹிந்துக்களில், அதிலும்
மேல் ஜாதியரில், ஒரு பெண்ணுக்குப் பத்துவயதாகு முன்பே அவள் பெற்றோர் அவளுக்கு வரன்
தேட ஆரம்பிக்கின்றனர். அந்தோ, அப்பெண்ணுக்கு அவ்வயதில் லௌகீக விஷயமொன்றும் தெரியாது.
அத்தகைய பேதையைப் பசுக்களைத் தானம் செய்வது போல் ஒருவனுக்கு மணம் செய்து கொடுப்பதே
நம் தற்கால ஹிந்து தர்மமாகும்! அப்பெண்ணுக்குப் பகுத்தறிவு வயது வந்தபின், தனக்கு வாய்ந்த
கணவன் தன் மனதிற்குச் சம்மதம் இருப்பினும் இல்லாவிடினும், அவள் தன் மனோபாவத்தை வெளி
யிடுவதற்கில்லை. அவள் எண்ணத்தை யார்தான் கண்ணியம் செய்வர்? தன் புருவன் கூனனோ, குருடனோ,
கிழவனோ, முடவனோ, மூர்க்கனோ, அவனுக்கே அவள் தன் வாழ்நாள் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவன் என்ன கொடுமை செய்யினும் அவள் எதிர்த்து ஏனென்று கேட்கலாகாது. அவள் துக்கிக்குங்கால்
அவள் பெற்றோர் பெரியோர், "எல்லாம் அப்பெண்ணின் அதிர்ஷ்டம், நாம் என்ன செய்யலாம்!
'' என்பர். நம் தேசத்தில் புருஷர்களுக்கு இத்தகைய கஷ்ட முண்டோ? ஆண்மகன் தன் சுயேச்சையாக
மணம் செய்து கொள்ளலாம். மற்றும் தன் மனைவி தனக்குச் சம்மதமில்லாவிடில், அவன் அவளை நீக்கி
விடுவதுமன்றி, வேறுகல்யாணமும் செய்து கொள்ளலாம். ஆண்களுக்கோ ஹிந்து சட்டமும் சமாஜமும்
அனுகூலமாகவே இருக்கின்றதன்றோ! பெண்கள் கதியே அதோகதி! புண்ணிய பூமியெனும் நம் தேசத்திற்கு
இத்தகைய அநியாயம் தகுமோ?
நம் ஹிந்து சமாஜத்தில்
பெண்களுக்கு வித்தைக்குத்தான் அருகத்துவம் இல்லை, ஐசுவரியத்திற்காவது சுதந்தரம் உண்டோ?
அதுவுமில்லை. பெண்ணுக்குப் பிதுர் ஆஸ்தியில் யாதொரு உரிமையும் கிடையாது. எந்தநாள் அவள்
மணம் முடி இன்றதோ, அந்த நாளே அவள் தன்தாய் வீட்டுக்குஹக்கை இழந்து, வேறு ஒரு குடும்பத்தவளாகின்றனள்
புருஷன் ஆஸ்திக்கும் அவளுக்குச் சுதந்தரமில்லை கணவன் தனக்கு அனுகூலமாயிருந்தால் அவன்
சொத்தை அவன் அனுபவிக்கலாம்; இல்லையாயின், அவள் பாடு திண்டாட்டம் தான். புருஷன் இறந்து
விட்டாலோ, துக்கத்துக்கு பாத்தியம் மனைவி; சொத்துக்கு பாத்தியஸ்தர் பின்ளை பங்காளிகள்!
கைம்பெண்ணின் கொடுமையைக் கூற வேண்டியதே இல்லை. பந்து மித்திரரும் அவளை அகிட்ட மென,
அவன் முகத்தில் விழிக்கவும் அஞ்சுவர். பேழைக்குள் இருக்கும் பாம்பென அவள் அஞ்சி பதுங்கி,
யாதொரு நிருவாகமுமின்றி, தவிக்க வேண்டியதாகின்றது. சுய சம்ரக்ஷனைக்கோ, அவளுக்கு வித்தையுமில்லை,
சக்தி சாமர்த்தியமுமில்லை. அவள் வாழ்நாளே வீண் நாளாகின்றதன்றோ! வித்தை, தானம், சக்தி
இவைகளுக்கு முதன்மையாக சரஸ்வதி, லக்ஷபமி, துர்க்கா பூஜிக்கப்படும் நம்பாத நாட்டில்,
அக்தேவதைகளின் அம்சங்களான பெண்கள் கல்வி ஆதாரமோ பொருள் ஆதாரமோவின்றி, திடமின்றித் திராணி
குன்றி, அசக்தராய், நிர்ப்பாக்கிய ஸ்திதியிலிருப்பது பரிதமிக்கத்தக்கதன்றோ? இதுவோ நம்
ஹிந்து சனாதன தர்மம்!
ஆனந்த போதினி – 1929 ௵ - ஜுலை ௴
No comments:
Post a Comment