Sunday, September 6, 2020

 

ரேகை சாஸ்திரம்

(வி. சங்கரய்யர்)

 

நம் வாழ்க்கையில் ஏற்படும் சுக துக்கங்களை அறிந்து கொள்ள ''ரேகை சாஸ்திரம்,'' ''ஜோதிடம்,'' என்ற இரண்டு முக்கிய நூல்கள் உள. இவைகளினால் இறந்த கால, நிகழ்கால பலன்களை அறிய இயல்வதுடன், எதிர்கால பலன்களையும் அறிய முடியும்.

 

ரேகை சாஸ்திரம் நம் அங்கங்களின் அமைப்புக்குத் தகுந்தாற்போலும், அவைகளில் உள்ள ரேகைகளுக்குத் தகுந்தாற்போலும், பலன்களைத் தெரிவிக்கும் நூல். 

 

ஜோதிடம் என்பது ஜாதகத்திற்கு, அதாவது நாம் பிறந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல் பலனை அறிவிக்கும் நூல். இவ்விரண்டிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அவைகளில் இப்பொழுது “ரேகை சாஸ்திரத்தைப் பற்றிக் கவனிப்போம்.

 

நாம் ரேகைகளின் பலன்களை அறிந்து கொள்ள எல்லாரேகைகளையும், எல்லா அங்க அமைப்புகளையும் நன்கு ஆராய்ச்சி செய்த பிறகே பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.

 

ரேகைகளை ஆராய்ச்சி செய்வதற்கு முன், அதிக வெளிச்சமிருக்கும் இடத்தில் உட்கார்ந்து நிதானமாக எல்லா ரேகைகளையும், (புருஷர்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும்) ஆராய்ந்து பலன்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

 

ரேகை சாஸ்திரத்தை இரண்டு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். 1. ஹஸ்த சாமுத்திரிகம் 2. அங்க சாமுத்திரிகம்.


ஹஸ்த சாமுத்திரிகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 

1. மணிக் கட்டிலுள்ள ரேகைகள். 2. உள்ளங்கை ரேகைகள்.3. விரல்களிலுள்ள ரேகைகள்.


மணிக்கட்டு ரேகைகள்.

 

இந்த ரேகைகளுக்குக் “கங்கண ரேகைகள்" என்று. மற்றொரு பெயருண்டு. மணிக்கட்டில் ஒரு ரேகை யிருந்தால், 25 தென்றும் 2 ரேகைகள் இருந்தால் 50 என்றும், 3. ரேகைகள் இருந்தால் 75 என்றும், 4 ரேகைகள் இருந்தால், பூர்ணாயுளுடையவனென்றும் தெரிந்து கொள்ளவேண்டும். மணிக்கட்டு ரேகைகளை மாத்திரம் ஆராய்ச்சி செய்து ஆயுளை நிர்ணயிப்பதில் சிலசமயங்களில் தவறுதல்கள் ஏற்படும். ஆகையால், ஆயுள் ரேகையையும் அநுசரித்து ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். ஆயுள் ரேகையைக் குறித்துப் பிறகு ஆராய்வோம்.

 

மணிக்கட்டில் 3 ரேகைகள் நன்கு பதிந்திருந்தால், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும், அதிருஷ்டமு முடையவனாக இருப்பான். கங்கணரேகைகள். எவ்வளவு நன்றாகப் பதிந்திருக்கின்றனவோ, அவ்வளவு ஆரோக்கிய முடையவனாக இருப்பான். கங்கண ரேகைகள் கொஞ்சமேனும் தெரியாவிடில் எப்பொழுதும் வியாதி உடையவனாகவும், வீண் செலவுகள் செய்பவனாகவும், இருப்பான். கங்ரேகைகளில் முதல் ரேகை சங்கிலிப்போல் பின்னிக் கெர்ண் டிருந்தால் கஷ்ட ஜீவனத்தையும், பலஹீனத்தையும் குறிக்கும். அதில் குறுக்கு ரேகைகள் இருந்தால், கஷ்ட ஜீவன்மர்னாலும், தனத்தைச் சம்பர்தித்து நிம்மதியாக ஜீவிப்பான். கங்கண ரேகைகளின் கிளைகள் உள்ளங்கையை நோக்கிச் சென்றிருந்தால், சுக ஜீவன மூடையவனாக இருப்பான். மணிக்கட்டில், கோணங்களைப்போல் ரேகை இருந்தால், பூர்வார்ஜித சொத்துக்கள் உடையவனாக இருப்பான். தனரேகை
பிறக்கும் இடத்தில் மணிக்கட்டு ரேகைகள் வெட்டப்பட்டு அத்துடன் சேர்ந்தால் பொய் பேசு
பவனாகவும், டாம்பீகனாகவும், இருப்பான். மணிக்கட்டு ரேகைகளின் நடுவில் புஷ்பத்தைப்போல் ரேகையிருந்தால் அதிருஷ்டமுடையவனாகவும் தனாதிபதியாகவும் இருப்பான். மணிக்கட்டிலிருந்து புதஸ்தானம் வரை ரேகை நீண்டு இருந்தால் அகஸ்மாத்தாகப் புதையல் கிடைக்கும். மணிக்கட்டில் 4 ரேகைகள் இருந்தால், ஜமீன்தாராகவும், 3 ரேகைகள் இருந்தால், அதிக போகமுடையவனாகவும், 2 ரேகைகள் இருந்தால், சம்சார சுக துக்கங்கள் உடையவனாகவும், ஒரு ரேகை இருந்தால், யோகியாகவும் இருப்பான். கங்கண ரேகைகள் சந்திர மேட்டில் பரவி இருந்தால், அதிகப் பிரயாணம் செய்ய நேரும்.

கிரக ஸ்தானங்கள்

 

ரவி (சூரிய) ஸ்தானம்: - மோதிர விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் இந்த இடம் உயர்ந்து (உப்பலாய்) இருந்தால், சூரியனின் ஆட்சி உடையவர்களாவார்கள். இவர்கள் மிகவும் அழகிய சரீரம் உடையவராகவும், இனிமையான குரலுடையவராகவும், தம் புன்சிரிப்பால் மற்றவர்களைத் தம் வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றலுள்ளவராகவும், ஆடை ஆபரணங்களில் அதிக ஆசையுடையவராகவும், அழகிய வஸ்துக்களின் மேல் பிரியமுடையவராகவும், மிகுந்த இரக்க முடையவராகவும், சத்தியவந்தராகவும், சாந்தகுணம் படைத்தவராகவும், மித போஜனம் செய்பவராகவும், காரமான ஆகாரத்தையும், சுண்டைக்காய் பாகற்காய் முதலிய கசப்புக் காய்கரிகளை உபயோகிப்பவராகவும், தங்களுடைய சாமர்த்தியத்தில் மிகவும் நம்பிக்கை உடையவராகவும், எடுத்த காரியத்தை எவ்விதத்திலாவது முடித்து ஜயமடையக்கூடியவராகவும், தனவந்தராகவும், செல்வாக்குப் படைத்தவராகவும், கௌரவ மடையக் கூடியவராகவும், சூஷ்மபுத்தி உடையவராகவும், வாணியின் பூரண அருள் அடைந்தவராகவும், சுதந்திர மனப்பான்மை உடையவராகவும், நியாயமான வழியில் தைரியத்துடன் நடக்கக் கூடியவராகவும், தங்கள் மனதில் தோன்றியதை உடனே எல்லோருக்கும் தெரிவிப்பவராகவும், முன்னேற்றத்திற்காக நூதனவழிகளைக் கண்டு பிடிப்பவராகவும், லோக சஞ்சாரம் செய்பவராகவும், மதப்பற்றுடையவராகவும், ஜோதிடத்தில் முழு நம்பிக்கையுடையவராகவும், மலை, அருவி, தோட்டம் முதலிய இடங்களிலுள்ள இயற்கைக் காக்ஷிகளைக்கண்டு களிப்பவராகவும், பித்ரு பக்திஉடையவராகவும், மூக்குக் (கண்) கண்ணாடியை உபயோகிப்பவராகவும் இருப்பார்கள். மேலும் சூரிய மகா தசையில் சூரியன் பிரகாசிப்பதைப்போல் இவர்கள் எல்லா விதங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள் (சூரிய ஸ்தானத்திலுள்ள ரேகைகளின் பலன் களைக் குறித்துப் பிறகு ஆராய்வோம்.)

 

சந்திர ஸ்தானம்:   - மணிக்கட்டின் மேற்பாகமாகிய, சிறிய விரலின் கீழே அமைந்திருக்கும் பாகம் சந்திர ஸ்தானம். (படத் தில் சந்திர ஸ்தானத்தைப் பார்க்கவும்) இந்த இடம் உயர்ந்து உப்புலாய்க் காணப்பட்டால் சந்திரனின் ஆட்சி உடையவர்களாவார்கள். இவர்கள் ஞான மார்க்கத்தில் இச்சை யுடையவராகவும், யோசனை சக்தி யுடையவராகவும், எந்த வேலையை யாகிலும் தீவிரமாய் யோசனை செய்தபிறகே காரியம் தொடங்குபவராகவும், பாலையும், பழங்களையும், உப்புக்கலந்த ஆகாரத்தையும் அதிகம் புசிப்பவராகவும், சந்தன, புஷ்பங்களை விரும்புபவராகவும், பட்டுத்துணிகளைத் தரிப்பவராகவும், பயந்த சுபாவ முடையவராகவும், அதிகப் பிரயாணம் செய்ய ஆசை யுடையவராகவும், மாத்ரு வாக்கிய பரிபாலனம் செய்பவராகவும், காளி பூஜை செய்பவராகவும், கற்பனாசக்தி அதிகம் வாய்ந்தவராகவும், மதுரமாய் வார்த்தையாடுபவராகவும், தூரதிருஷ்டி வாய்ந்தவராகவும், திடசித்த மில்லா தவராகவும், மனோரதப் பிரயாணம் செய்வதால் சோம்பேறியாகவும்,

 

ஏகாந்தத்தை விரும்புபவராகவும், எண்ணாத எண்ணங்களை எல்லாம் எண்ணி, எட்டாத கோட்டைகளைக் கட்டுபவராகவும், பகற்கனவு காண்பவராகவும், கூர்ந்தபுத்தி உடையவராகவும், குதர்க்கம் பேசுபவராகவும், வாயாடியாகவும், பொய் பேசுபவராகவும், பேராசை யுடையவராகவும், மனோசாந்திக்காகப் புதிய, புதிய, இடங்களைத் தேடுபவராகவும், கல்வி அதிகம் கற்காமலே, எல்லாம் கற்றவரைப்போல் நடிப்பவராகவும் இருப்பார்கள். மேலும், சூரியனின் உதவியால் சந்திரன் பிராகாசிப்பதைப் போல், இவர்கள் சூரிய ஆட்சி உடையவர்களின் உதவியால் சந்திர மகா தசையில் பிரசித்தி அடைவார்கள் (சந்திர மேட்டிலுள்ள ரேகைகளைக் குறித்தும், பலன்களைக் குறித்தும், பிறகு ஆராய்வோம்.)

 

குஜ (செவ்வாய்) ஸ்தானம் - சந்திர ஸ்தானத்திற்கு மேலும், புத ஸ்தானத்திற்குக் கீழும் அமைந்திருக்கும். இந்த இடம் உயர்ந்து உப்பலாய் இருந்தால் குஜ ஆதிக்கம் உடைய
வர்களாவார்கள். இவர்கள் மிகவும் தைரிய குண முடையவராகவும், சண்டையில் கெட்டிக்காரராகவும், வீண் பிடிவாத குணமுடையவராகவும் சுதந்திரத்திற்காகத் தம் பிராணனையும் இழக்கத்தயாராய் இருப்பவராகவும், - தேகாரோக்கிய முடையவராகவும்,
சுறு சுறுப்புடையவராகவும், கம்பீரமான குரலும், நடையும் உடையவராகவும், ஷண்முகக் கடவுளை மிகவும் பக்தியுடன்
சேவிப்பவராகவும், பூஸ்திதி உடையவராகவும், உற்சாகத்தோடு ரண களத்திற்குச் செல்பவராகவும், சுயம் பாகத்தை (தான் சமைத்த உணவை) அதிகம் விரும்புபவராகவும், உலோகங்களின் தொழிற்சாலையில் வேலை செய்பவராகவும் (முதலாளியாகவும்). உளுந்தால் செய்யப்பட்ட பதார்த்தங்களை அதிகம் புசிப்பவரர்கவும், இருப்பார்கள். மேலும் இவர்களின் சொத்துக்களுக்குச் செவ்வாய் மகா
தசையில் திருட்டுப் பயமும், அக்னி பயமும் ஏற்படும். (செவ்வாய் மேட்டிலுள்ள ரேகைகளின் பலன்களைக் குறித்துப் பிறகு ஆராய்
வோம்)

 

புத ஸ்தானம்: - சிறிய விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும். இந்த இடம் உயர்ந்து (உப்பலாய்) இருந்தால், புதனின் ஆட்சி உடையவர்களாவார்கள். இவர்கள் எப்பொழுதும் ஹாஸ்ய்மாகப் பேசுபவராகவும், சிற்ப வித்யா நிபுணராகவும், சங்கீதத்தில் தேர்ச்சி அடைந்தவராகவும், விளையாட்டுகளில் கெட்டிக்காரராகவும், எழுதுவதில் தன் நிகரற்று விளங்குபவராகவும், சோம்பலின்றித் தன் வேலையில் எப்பொழுதும் கண்ணும் கருத்து முடையவராகவும், மற்றவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவர்களின் எ ண்ணங்களைக் கிரகிப்பவராகவும், ஸ்ரீ கிருஷ்ணபிரான் மீது பக்தியுடையவராகவும், வியாபாரத்தில் (உத்தியோகத்தில்) நல்ல லாபமடையக் கூடியவராகவும், சாதுர்யமாகப் பேசுபவராகவும், அழகுடைய புத்திரர்களுடையவராகவும், எடுத்த காரியத்தைச் சீக்கிரம் முடித்துப் பெரும்புகழ் அடையக் கூடியவராகவும், வாக்குச்சாதுரிய முடையவராகவும், நாய், குதிரை, பசு, மான், முய்ல், புறா முதலிய பிராணிகளை அன்புடன் வளர்ப்பவராகவும், வக்கீல் தொழிலிலாவது, வியாபாரத் தொழிலிலாவது அல்லது வைத்தியத் தொழிலிலாவது தனம் சம்பாதிப்பவராகவும், இருப்பார்கள். (அவர் எத்தொழில் செய்வார் என்பதை நிச்சயமாக அறிய, அவருடைய விரல்களைக் கவனிக்க வேண்டும். விரல்களைக் குறித்தும், புத ஸ்தானத்திலுள்ள ரேகைகளைக் குறித்தும், பிறகு ஆராய்வோம்.)


குரு ஸ்தானம்: - ஆள்காட்டி விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும். இந்த இடம் நன்கு அமைந்திருந்தால், குரு ஆட்சி உடையவர்களாவார்கள். இவர்கள் சிவந்த கண்களும், கேசங்களுமுடையவராகவும், கம்பீரத் தோற்றமுள்ளவராகவும், நோயற்ற வாழ்க்கை யுடையவராகவும், புத்திமான்களாகவும், செல்வம் படைத்தவராகவும், வேத வேதாந்தங்களைக் கற்றவராகவும், சம்ஸ்கிருத பாஷையில் பாண்டித்யம் வாய்ந்தவராகவும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் சக்தி வாய்ந்தவராகவும், (குருவாகவும்) பிரதி தினம் யோகாப்யாசம் செய்பவராகவும், ஆசார சீலராகவும், வித்யா நிபுணராகவும், தர்ம குண முடையவராகவும், ஏழைகளிடத்தில் இரக்கம் வாய்ந்தவரர்கவும், அஹிம்சா மூர்த்தியாகவும், ஞான வந்தராகவும், கீர்த்தி, கௌரவம் வாய்ந்தவராகவும், ஆலோசனையில் நிபுணராகவும், உயர்ந்த பதவிகளிலுள்ளவராகவும், அல்லது தேசத்தலைவராகவும், மதப்பற்றுள்ளவராகவும், இனிப்புப்பதார்த்தங்களை அதிகம் புசிப்பவராகவும், சுற்றம் சூழ்ந்தவராகவும், சந்தான சௌக்கியங்களுடையவராகவும் இருப்பார்கள். (குரு ஸ்தானத்திலுள்ள ரேகைகளைக் குறித்துப் பிறகு ஆராய்வோம்)

 

சுக்கிர ஸ்தானம்: - கட்டை விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் இந்த ஸ்தானம் உயர்ந்து உப்பலாய்க் காணப்பட்டால், சுக்கிர ஆட்சி உடையவர்களாவார்கள். இவர்கள் பிரகாசமான கண்களுடையவராகவும், கருமையாய் நீண்டு வளர்ந்த கேச முடையவராகவும், கான, வித்யா, நாட்டிய, வர்த்தியங்களில் நிபுணராக்வும், விநோத ஹாஸ்ய கேளிக்கைகளில் காலம் கழிப்பவராகவும், சோம்பலற்றவராகவும், கவி பாடும் சக்தி வாய்ந்தவராகவும், அழகிய ஆடைகளையும், முத்து ஆபரணங்களையும், தரிப்பவராகவும், எப்பொழுதும், தம்மை அழகு படுத்திக் கொள்பவராகவும், வாசனைத் திரவியங்களை, உபயோகிப்பவராகவும், ஸ்திரீ லோலரர்கவும் (தாசிகளாகவும்) அழகுடைய பதி (சதி) வாய்ந்தவராகவும், சிசுக்களின் மேல் அன்புடையவராகவும், வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிப்பவராகவும், பிரசங்கம் செய்து, எல்லோரையும் ஆகர்ஷிக்கும் சக்தி யுடையவராகவும், புளிப்புள்ள ஆகாரத்தையும், பால், தயிர், நெய் அவரைப் பருப்பு முதலிய வஸ்துக்களை அதிகம் உபயோகிப்பவராகவும், போஜனப்பிரியராகவும், சமயோசித மதி வாய்ந்தவராகவும், ஞாபக சக்தியுடையவராகவும், பரோபகார குணமுடையவராகவும், வாகன (சைக்கிள், மோட்டார், வண்டி முதலியவைகள்) பிராப்தி யுடையவராகவும், சிநேக குண முடையவராகவும் அன்னிய நாட்டில் உத்தியோகம் (வியாபாரம்) செய்பவராகவும், கண் தெரியாமல் காமம் கொள்வதால் வியாதியஸ்தராகவும் இருப்பார்கள். (சுக்கிர மேட்டிலுள்ள ரேகைகளின் பலன்க்ளைக் குறித்துப் பிறகு ஆராய்வோம்.)

 

சனி ஸ்தானம்: - பெருவிரலின் அடிப்பாகத்தில் அமைந்திருக்கும் சனி ஸ்தானம் உயர்ந்து கம்பீரமாய்க் காணப்பட்டால், சனி ஆட்சி உடையவர்களென்று கருத வேண்டும். இவர்கள் கருப்பு நிறமுடையவராகவும், பார்ப்பதற்குப் பயங்கரமான தோற்ற முடையவராகவும், அகன்ற பற்களுடையவராகவும், முள்ளம் பன்றியின் கேசத்தைப் போல் கடினமாயும், முட்களைப் போன்றும், கேசமுடையவராகவும், கடினக் குரலுடையவரர்கவும், தரித்திரராகவும், மிகுந்த கோபமுடையவராகவும், மதுபானம் செய்பவராகவும், மாம்சபக்ஷணம் புசிப்பவராகவும், ஜீவ ஹிம்சை செய்பவராகவும், துஷ்ட சகவாசமுடையவராகவும், நீசத் தொழில் செய்பவராகவும், கஷ்டத்தின் மேல் கஷ்ட்மனுபவிப்பவராகவும், கட்னாளியாகவும், திருடராகவும், ராஜ தண்டனை அடைந்த (அடையக் கூடிய) வராகவும், சதா துக்கத் தோற்றத்துடன் இருப்பவராகவும், அங்க ஹீனராக்வும், ஸ்ரீ கிருஷ்ண பிரானின் ஜன்ம ஸ்தானத்தில் (ஜெயிலில்) குற்றவாளியாகவும், அல்லது உத்தியோக முடையவராகவும், சந்தேக முடையவராகவும், வெட்கம் கெட்டவராகவும், வீண் வார்த்தையாடுபவராகவும், வாத சம்பந்தமான வியாதியுடையவராகவும், இரும்பு, ஈயம் முதலிய வியாபாரங்கள் செய்பவராகவும், அல்
லது தொழிற்சாலையில் உத்தியோக முடையவராகவும் இருப்பார்கள். (சனி மேட்டிலுள்ள ரேகைகளின் பலன்களைக் குறித்துப் பிறகு ஆராய்வோம்.)

 

ஆயுளை நிர்ணயிக்கும் விதம்

ஒருவருடைய கையைப் பார்த்து பலன் சொல்ல நேரிட்டால் முதலில் ஆயுள் ரேகையைக் கவனிக்கவேண்டும்.

 

உதாரணமாக ஒரு குழந்தை பிறந்தவுடன் ஓர் ஜோதிடரிடம் சென்றால், அவர் முதலில் ஆயுள் பாவத்தை கவனித்த பிறகே மற்ற பாவங்களை நிர்ணயிப்பார். ஏனென்றால், அக்குழந்தை அற்ப ஆயுளுடைய தாக இருந்து, அக்குழந்தைக்கு 50-ம் வயதில் அதிருஷ்ட முண்டாவதாக இருந்தால், மேற்படி அதிருஷ்டம் வரும் வரை அக் குழந்தைக்கு ஆயுள் இல்லாததால் மேற்படி அதிருஷ்டம் பயனற்ற தாகும்.

 

அவ்வாறே ரேகை சாஸ்திரத்திலும் ஆயுளை நிர்ணயித்த பிறகே மற்ற ரேகைகளின் பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.

 

ரேகை சாஸ்திரத்தை இயற்றிய பிரகலாதனும், கர்க மகரிஷியும், வராஹ மிஹிர மகரிஷியும் நம் சரீரத்தின் மூலம் ஆயுளை நிர்ணயிக்க மூன்று விதங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


1. மணிக்கட்டு ரேகைகளைக் கொண்டு ஆயுளை நிர்ணயித்தல்.

 

2. ஒருவர் மேல் நோக்கி திருஷ்டியை (பார்வையை) செலுத்தினார்களானால் அவர்கள் நெற்றியில் எவ்வளவு கோடுகள் தென்படுகின்றதோ, அந்தக் கோடுகள் ஒவ்வொன்றிற்கும் 20 வயதென்று கணக்கிட்டு ஆயுளை நிர்ணயித்தல்.


3. ஆயுள் ரேகையால் ஆயுளை நிர்ணயித்தல்.

 

நாமும் மேற்படி மூன்று விதங்களைக் கொண்டு ஆயுளை நிர்ணயித்தால் தவறுதல் நேரிடாது.

 

1. மணிக்கட்டு ரேகைகளைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்கும் விதம் ஆவணிமாத இதழில் 62 ம் பக்கத்தில் பிரசுரம் செய்யப் பட்டிருக்கிறது.

 

2. நெற்றியில் ஏற்படும் கோடுகளைக் கொண்டு நிர்ணயிக்கும் விதத்தை மேலே அறிவித்திருக்கிறேன்.


3. ஆயுள் ரேகையைக் குறித்து இங்கு ஆராய்வோம்:


  
ஆயுள் ரேகை

 

1. ஆயுள் ரேகை மெல்லியதாகவும், சிவப்பு வர்ணமுடைய்தாகவும் ஆழமின்றி (முதல் படத்தில் இருப்பதைப்போல்)

ஆள் காட்டி விரலுக்கும், பெரிய விரலுக்கும் நடுவில் சென்றிருந்தால், பூர்ண ஆயுளுடையவராக இருப்பார்கள். இவர்கள் யாதொரு வியாதியுமின்றி தேகாரோக்கியத்துடன் எப்பொழுதும் புன்னகை தவழும் முகத்துடன் காணப் படுவார்கள். எக்காரியத்திலும் தைரியமாகப் பிரவேசிப்பார்கள். தாங்கள் பிரவேசித்த காரியம் ஐயமடைந்தாலும், அபஜயமடைந்தர்லும், அதைப் பொறுமையுடன் சகித்கொள்ளும் ஆற்றலுள்ளவராக இருப்பார்கள்.

 

 

 

குரு ஆதிக்கமும் சேர்ந்திருக்குமாயின், பிறர் கஷ்டங்களைக் கண்டு சிறிதும் சகிக்க மாட்டார்கள். தங்களாலியன்ற உதவியை அவர்களுக்குச் செய்வதில் பின்வாங்க மாட்டார்கள்.

 

மித்திரர்களுக்குத் தங்கள் பிராணனையும் கொடுத்து காப்பாற்றும் குணமுடையவர்களாய் இருப்பார்கள். இவர்களை நம்பி எக்காரியத்தில் பிரவேசித்தாலும் ஜயமுண்டாகும்.


2. சனி மேட்டிற்கும், சூரிய மேட்டிற்கும் இடைவரை ஆயுள் ரேகை

சென்றிருந்தால், 50 வயதென்று ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறே ஆயுள்ரேகை எவ்வளவு தூரம் செல்கின்றதோ அவ்வளவு ஆயுளுடையவரென்று நிர்ணயிக்கவேண்டும்.

 

 

3. ஆயுள் ரேகையில் கிளைகள் தென்படின, கிளைகள் தென்பட்ட வயதில் வியாதி உண்டாவதைக் குறிக்கும். (படம் 3)

கிளைகள் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதோ அவ்வளவு வயது வரை வியாதி நீடித்திருக்கும். கிளைகள் ஆழமாகப் பதிந்திருந்தால் கடுமையான வியாதி பீடிக்கும். உதாரணமாக ஒருவர் கையில் இருக்க வேண்டிய ஆயுள் ரேகையை 8 பாகங்களாகப் பிரித்தால் பாகம் ஒன்றுக்கு 12-1/2 வயதாகிறது. ஆயுள் ரேகை 6 பாகம் வரை வியாபித்திருந்தால் 75 வருஷம் வயதாகிறது. 5ம் பாகத்தில் மேற்படி ஆயுள் ரேகையிலிருந்து சிறு கிளைகள் பிரிந்திருந்து 1/8 அங்குலம் சென்று மறைந்து விட்டால் 62-1/2, வயதில் ஓர் வியாதி உண்டாகி சுமார் 68-3/4 வயது வரை அவ்வியாதி நீடித்திருந்து பிறகு குணமாகி 75ம் வயதில் மரண முண்டாவதைக் குறிக்கும்.

 

இவ்வாறே ஆயுளையும் வியாதி வரும் காலத்தையும், வியாதி நீங்கும் காலத்தையும், ஆராய்ந்து அறிய வேண்டும்.


4. ஆயுள் ரேகை இரண்டாகப் பிரிந்து மறுபடியும் ஒன்றாகச் சேருமாயின்,

ஆயுள் ரேகை பிரி காலம் முதற் கொண்டு மறுபடியும் சேரும் காலம் வரை பலஹீன முண்டாவதையும், மனோ வியாதி உண்டாவதையும் அறிவிக்கும் (படம் 4)

 

 

 

5. ஆயுள் ரேகை விட்டு விட்டுச் சென்றிருக்குமாயின் அவ்வப் பொழுது ஆபத்துகள் ஏற்படுவதைக் குறிக்கும்.

(படம் 5) துண்டுகளின் இடையில் எவ்வளவு தூரம் விட்டிருக்கிறதோ அவ்
வளவு வயது வரை ஆபத்துகள் நீங்காமல் இருப்பதை ஊர்ஜிதப் படுத்தும்.

 

 

 

 

      விபத்துகள் ஏற்படும் காலத்தையும், நீங்கும் காலத்தையும் முன் அறிவித்தபடியே அறிய வேண்டும்.

ஆனந்த போதினி – 1944 ௵ - ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர், ௴

No comments:

Post a Comment