Sunday, August 30, 2020

 

கற்புள்ள ஸ்திரீகளுக்கு தகாத சில நடக்கைகள்

 

1. வீட்டைவிட்டு அடிக்கடி தெருவாசற்படியண்டை வந்து பார்த்துக் கொண்டிருத்தல்.

 

2. வெளியே தனியாய்ப் போய்க் கிரமத்திற்கு மேல் அதிக நேரந் தங்கி வீண் வம்பு பேசுதல்.

 

3. நல்லவர் பொல்லாதவர் எல்லோர் பேரிலும் விபசார தோஷம் கற்பித்துக் கொண்டிருத்தல்.

 

4. புகுந்த வீட்டைத் தூஷித்துப் பிறந்த வீட்டை மேன்மைப் படுத்திப் பேசுதல்.

 

5. கணவனோடு எதிர்பேசி அவனைப்பற்றி மற்றவரோடு ஏதாவது தோஷம் பேசுதல்.

 

6. அன்னியரோடு இவன் அவளை அவன் இவளை வைத்துக்கொண் டிருக்கிறான் என்று பேசுதல்.

 

7. அன்னிய புருஷரிடத்திற் பேசக்கூடாத விஷயங்களைப் பேசுதல்.

 

8. எப்பொழுதுங் கண்ணாடியிற்றங்கள் அழகைப்பார்த்துக் கொண்டிருத்தல்.

 

9. தங்கள் ஆபரண முதலியவைகளை வாங்கின கிரயம் வாங்கின இடம் இவைகளைத் தாமாகவே சொல்லுதல்,

 

10. போகத்தகாத கூத்துக்கள், நாடகங்கள், பயாஸ்கோப் முதலிய வற்றிற்குப் போக ஆசைப்படுதல்.

 

11. புருஷன் அநுமதியின்றி அவன் மனதிற்கு விரோதமான ஆட் களுடன் பேசுதல், அவர்கள் இடங்களுக்குப் போகுதல்.

 

12. புருஷன் கோபித்தால் அவனுக்கு மேற் பதின்மடங்கு பேசி ஊர் சிரிக்கச் செய்தல்.

 

13. பர ஸ்திரீகளை வைத்திருக்கும் அன்னியரைக் கண்டால் அவர் கள் வைப்பாட்டிகளின் யோக க்ஷேமங்களை அதிக ஆவலோடு விசாரித்தல்.

 

14. புருஷன் மனஸ்தாபமாயிருக்குங் காலத்திலும் அவன் நோயாயிருக்குங் காலத்திலும் ஊரில் இல்லாத காலத்திலும் மையிட்டுப் பொட்டிட்டு ஆபரணங்கள் பூண்டு ஊர்சுற்றப் புறப்படுதல்.

 

15. புருஷனுடைய உத்தரவின்றி வீட்டிலுள்ள சாமான்களை விற்றுச் சிறுவாடு சேர்த்தல்.

 

16. அன்னிய புருஷனுக்கும் ஸ்திரீக்கும் நட்புண்டாகும் விஷயத்தில் மிகுந்த சிரத்தை எடுத்துத் தரகு பேசுதல்.

 

ஓர். உலகமானி. (லங்காவிகடன்)

 

ஆனந்த போதினி – 1925 ௵ - பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment